மாட்டுக்கொட்டிலின்
மடி தான்
இயேசுவின் பிறப்பு...
குருசேத்ரத்தில்
குருதிச்சுத்தம் செய்த
கண்ணனுக்கே
ஆ (பசு) தான் அன்னை...
மாடு மேய்த்த கண்ணனும்
ஆட்டிக்கு அடைக்கலம் கொடுத்த இயேசுவும்....
மாட்டிலிருந்து இறைச்சியும்
ஆட்டிலிருந்து பாலும்...
எல்லாம் வெறும்
சுய (மனித) நலம்
மனிதா புரிந்துகொள்!
எம்மதமும் சம்மதமே....